top of page
library_1.jpg

சேக்சுபியர் கதைகள் VOL-6

Writer's picture: Tamil BookshelfTamil Bookshelf

கா. அப்பாத்துரையார்



புயற்காற்று

** கதை உறுப்பினர்கள்**

ஆடவர்

1. பிராஸ்பிரோ: மிலன் மன்னன் - தம்பி அந்தோனியோவால் துரத்தப்பட்டு மாயத் தீவில் தங்கியவன் - மிராந்தா தந்தை.

2. அந்தோனியோ: அண்ணன் பிராஸ்பிரோவைத் துரத்தி அரசனானவன்.

3. நேபல்ஸ் அரசன்: பிராஸ்பிரோ பகைவன். அவனைத் துரத்த அந்தோனியோவுக்கு உதவியவன்.

4. பெர்திநந்து: நேபல்ஸ் அரசன் மகன் - மிராந்தாவைக் காதலித்தவன்.

5. கன்ஸாலோ: பெருங்குடி மகன்-பிராஸ்பிரோவின் நண்பன்.

6. காலிபன்: தீவிலிருந்து காலஞ்சென்ற ஸிகோராக்ஸ் என்ற கொடிய மாயக்காரியின் மகன். அரை விலங்கியல் புடையவன்-முழுச் சோம்பேறி-பிராஸ்பிரோவால் சுடு வேலையிலிடப்பட்டவன்.

7. ஏரியல்: ஸிகோராக்ஸால் மரத்தில் சிறைப்படுத்தப்பட்ட நல் ஆவி - பிராஸ்பிரோவால் விடுவிக்கப்பட்டு அவனுக்குத் தொண்டு செய்தவன். காலிபனைத் துன்புறுத்தி வேலை வாங்க உதவியவன்.


பெண்டிர்

1. மிராந்தா: பிராஸ்பிரோ மகள். அவள் நாடுவிட்டு வரும்போது குழந்தை. பெர்திநந்தைக் கண்டு காதலித்தவள்.


** கதைச் சுருக்கம்**

மந்திர நூலாராய்ச்சியில் மூழ்கிய மிலன் அரசனாகிய பிராஸ்பிரோவை அவன் தம்பி அந்தோனியோ அவன் பகைவனாகிய நேபல்ஸ் அரசன் உதவிகொண்டு வீழ்த்தி அரசனானான். பிராஸ்பிரோ கைக்குழந்தையாகிய மிராந்தாவுடன் சிறு படகில் கடலில் தள்ளப்பட்டான். ஆனால், அவன் நண்பனாகிய கன்ஸாலோப் பெருமகன் பிறருக்குத் தெரியாமல் படகில் அவர்களுக்கு வேண்டிய உணவு உடைகளையும், மந்திர நூல்களையும் வைத்திருந்தான். ஆகவே, அவர்கள் ஸிகோராக்ஸ் என்ற மாயக்காரியிருந்த தீவில் இறங்கியதும், பிராஸ்பிரோ இறந்து போன ஸிகோராக்ஸ் அடைத்து வைத்து ஏரியல் என்ற நல் ஆவியை விடுவித்து அதனுதவியால் காற்றையும் கடலையும் ஏவி யாண்டதுடன், ஸிகோராக்ஸின் பிள்ளையாகிய அரை விலங்கியல்புடைய காலிபனையும் அவனுதவியால் கடுவேலையிற் பழக்கிக் கொண்டான்.

ஒருநாள் நேபல்ஸ் அரசனும் அவன் மகன் இளவரசன் பெர்திநந்தும், அந்தோனியாவும் ஒரு கப்பலில் அவ்வழியே போய்க் கொண்டிருந்தார்கள். பிராஸ்பிரோ ஏரியலைத் தூண்டி ஒரு மாயப் புயலை எழுப்பிக் கப்பல் கவிழ்ந்தது போல் காட்டி ஒவ்வொருவரையும் தனித் தனியே கரையில் தப்ப வைத்தான். அவர்களுள் பெர்திநந்தைப் பிராஸ்பிரோ தன் மகள் இருக்குமிடம் கொணர்விக்க அவர்கள் எளிதில் காதல் கொள்கின்றனர். பெர்திநந்துக்குக் கடுவேலை கொடுப்பதன் வாயிலாக அவர்கள் காதலின் ஆழத்தை ஆய்ந்தபின் பிராஸ்பிரோ அனைவரையும் ஒருங்கு சேரவிட்டுத் தன் மாயமனைத்தும் கூறுகிறான். அந்தோனியோவும் நேபல்ஸ் அரசனும் தம் பிழை கண்டு வெட்கி மன்னிப்பு வேண்டுகின்றனர். அனைவரையும் ஏரியல் நாட்டுக்கு விரைந்தனுப்ப அங்கே பெர்திநந்துக்கும் மிராந்தாவுக்கும் மணம் நிகழ்ந்தது. ஏரியல் அவர்களை அனுப்பியவுடன் முழு விடுதலையும் பெற்றான்.

சிற்றப்பன் சூழ்ச்சி

இளவரசனைக் காணுதல்

உள்ளம் கலத்தல்


Comments


Subscribe here to get my latest posts

Thanks for submitting!

© 2023 Powered by Tamil Bookshelf

  • Facebook
  • Twitter
bottom of page